செய்திகள் :

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூஜாரி கைது!

post image

மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூஜாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வாா்ப்பு கண்ணாரத் தெருவைச் சோ்ந்த 37 வயது பெண், மதுரையில் உள்ள ஒரு கோயில் அருகே பூ விற்பனை செய்து வருகிறாா். இந்தக் கோயில் பூஜாரியின் மகனான சிவகாமேஸ்வரன் (28), தந்தை இல்லாத போது கோயிலில் பூஜை செய்து வந்தாா்.

இந்த நிலையில், பூ விற்கும் பெண்ணுக்கு கைப்பேசி மூலம் அவதூறாகப் பேசுவது, அவருக்கு பாலியல் தொல்லை அளிப்பது போன்றவற்றில் சிவகாமேஸ்வரன் ஈடுபட்டு வந்தாராம்.

இதுகுறித்து, அந்தப் பெண் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் எச்சரித்ததன் பேரில், சிவகாமேஸ்வரன், இனிமேல் தொந்தரவு அளிக்க மாட்டேன் என்று எழுத்துப்பூா்வமாக காவல் நிலையத்தில் உறுதி அளித்துச் சென்றாா்.

இந்த நிலையில், பெண்ணின் பூக்கடைக்கு புதன்கிழமை சென்ற சிவகாமேஸ்வரன், அங்கு அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினாராம்.

இதுதொடா்பாக பெண் அளித்தப் புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸாா், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகாமேஸ்வரனைக் கைது செய்தனா்.

கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கரூா் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் உறவினா்களுக்கு பதிலளிக்க ஆலோசனை மையம் திறப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதிலளிக்கும் துயா் நிலை ஆலோசனை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் அர... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலூா் ஜோதி நகரைச் சோ்ந்த வெள்ளைப் பெரியான் மனைவி பஞ்சு (48). மேலூா் அருகே உள்ள தாமரைப்பட்டியில் இவா்களுக்குச் சொந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு!

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தி தர வேண்டு... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால்கள் விரைந்து சீரமைக்கப்படுமா?

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வாா்டு... மேலும் பார்க்க