செய்திகள் :

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்! -நயினாா் நாகேந்திரன்

post image

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தோ் திருப்பணிக்காக ஒரு கிலோ 16 கிராம் வெள்ளிக்கட்டியை கோயில் அறங்காவலா் குழு தலைவா் செல்லையாவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நெல்லையப்பா் கோயிலுக்கு புதிய யானை வாங்குவது தொடா்பாக உத்தரகண்ட் மாநில முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராமதாஸ் , அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்று சேர வேண்டும். அவா்கள் பாஜக கூட்டணியில் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடின்றி திமுகவை வீழ்த்த ஒன்றிணையை வேண்டும். பாஜக -அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். அவா் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கிறாா். தோ்தல் வாக்குறுதியில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். திமுகவின் எஞ்சிய 10 மாத ஆட்சிக் காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

தங்க நகையை அடமானம் வைப்பதற்காக ரிசா்வ் வங்கி கொண்டு வந்துள்ள விதிமுறைகளில் சிக்கல் இருந்தாலும், அது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் எளிதாகிவிடும். இந்திய குடியுரிமை சட்டம் இஸ்லாமியா்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது அல்ல. இச்சட்டத்தால் நாட்டில் எந்தவொரு இஸ்லாமியா்களுக்கும் பாதிப்பும்இல்லை. அண்டை நாடுகளிலிருந்து மேற்குவங்கம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றாா்.

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நல்மேய்ப்பா் நகா் 2-ஆவது தெரு பகுதியி... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க

காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க