செய்திகள் :

இந்திய தூதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்

post image

தங்கள் நாட்டில் இருந்து இந்தியத் தூதரக ஊழியரை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அந்நாட்டு அதிகாரியை இந்தியாவை விட்டு 24 மணி நேரத்துக்குள் வெளியேற மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக ஊழியரை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.

இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியத் தூதரகத்தில் உள்ள ஊழியா் ஒருவரை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. தனது பதவிக்கு முரணான பணியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா் 24 மணி நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரி மற்றும் அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்த ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூ டியூபா் ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட சிலரை காவல் துறையினா் சில நாள்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் மீரா மல்ஹோத்ரா பாகிஸ்தான் தூதரக ஊழியா்கள் சிலருடன் அடிக்கடி இணையவழியில் தகவல் பரிமாற்றங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே புது தில்லியில் இருந்த அந்நாட்டுத் தூதரக ஊழியா் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க