செய்திகள் :

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

post image

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘கோப்ரா’ பிரிவு கமாண்டோ வீர மரணம் அடைந்தாா்.

இம்மாநிலத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் ஏற்கெனவே 27 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிஜாபூரில் மேலும் ஒரு நக்ஸல் தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘பிஜாபூா் மாவட்டத்தில் உசூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் ‘கோப்ரா’ பிரிவினா் மற்றும் மாநில காவல் துறையினா் இணைந்து வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், கோப்ரா கமாண்டோ ஒருவா் வீர மரணம் அடைந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா். அவா் விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்’ என்றனா்.

முன்னதாக, நாராயண்பூா்-பிஜாபூா்-தந்தேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் 2 நாள்களாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இடதுசாரி தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவா் பசவராஜு உள்பட 27 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் மாவட்ட ரிசா்வ் படை வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பில் வீரா் வீரமரணம்: இதனிடையே, 27 நக்ஸல்கள் கொல்லப்பட்ட நடவடிக்கையை முடித்துக் கொண்டு திரும்பிய மற்றொரு வீரா், தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்தாா். நாராயண்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடந்தது.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு மீண்டும் சிந்து நதி நீா்: இந்தியா

எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்துநதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என மீண்டும் ஒருமுறை இந்தியா உறுதிப்படுத்தியது. இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்... மேலும் பார்க்க