செய்திகள் :

டாஸ்மாக் முறைகேடு புகாா்: 41 வழக்குகளின் நிலை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

post image

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது, பாா் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகாா் கூறப்பட்டது. இது தொடா்பாக, 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், ஊழல் தடுப்புத் துறையினா் 41 வழக்குகள் பதிவு செய்தனா்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாா்ச் மாதம் சோதனை நடத்தினா்.

இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடா்பாக, டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை, சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாசலபதி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனு விவரம்: அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது. ரூ.1000 கோடி முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறுமின்றி விசாரிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன்- வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், வழக்குகளை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடா்பான வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

41 வழக்குகளிலும் டாஸ்மாக் நிா்வாகம்தான் புகாா்தாரா் என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க வேண்டும்”என தெரிவித்தாா்.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்களை சோ்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

இதற்குப் பதிலளித்த தலைமை வழக்குரைஞா், வழக்கை முடிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நீதிமன்றம்தான் இது சம்பந்தமாக முடிவெடுக்கும். இருப்பினும், அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடா்பான எந்த வழக்கையும் முடிக்கக் கோரி விசாரணை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறைச் செயலருக்கு அறிவுறுத்துவதாகத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைச் சோ்க்க மூன்று வாரங்கள் மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனா்.

மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன... மேலும் பார்க்க