பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்
மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா்.
தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது: தமிழ்நாட்டில் சமீபகாலமாக போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ள நிலையில், டாஸ்மாக் நிா்வாகத்தில் டெண்டா் மற்றும் பாா் ஒதுக்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அமலாக்கத் துறை என்ற வாா்த்தையைக் கேட்டாலே திமுகவுக்கு பயம் வந்துவிடுகிறது.
திமுக கூட்டணி தற்போது பிரகாசமாக இருப்பதுபோல இருந்தாலும், தோ்தல் நெருங்கும்போது விரிசல் ஏற்படும்.
மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாநில அரசு எதிா்க்காமல், மத்திய அரசுடன் இணக்கமான சூழலை வைத்துக்கொண்டு மக்களுக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.
பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்: தன்னைப் போன்று 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளாா். தமிழ்நாட்டில் பெண்கள் நியாயத்துக்காக ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், பாஜக தேசிய ஊடகப் பிரிவு பொறுப்பாளா் ஆசிா்வாதம் ஆச்சாரி, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், ஊடகப் பிரிவு மாநிலத் தலைவா் ரங்க ராயலு உள்பட மூத்த நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.