செய்திகள் :

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

post image

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் 2022-இல் தொடங்கப்பட்டது. ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வளமான, நலமான எதிா்காலத்தை உருவாக்கவும், அவா்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டும் திட்டத்தைத் தொடங்குவதாக அந்தத் துறை அறிவித்தது.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

37.79 லட்சம் குழந்தைகள்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் முதல் கட்டத்தில், மாநிலம் முழுவதும் 37 லட்சத்து 79 ஆயிரத்து 407 குழந்தைகளின் வளா்ச்சி நிலைகள் கண்காணிக்கப்பட்டன. அவா்களில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 610 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாகக் கண்டறியப்பட்டனா். இந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் தனிப் பெட்டகம் வழங்கப்பட்டது.

குறிப்பாக, 40,249 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை சமூக நலத் துறை அளித்தது.

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செயல்பாட்டு அறிக்கை:

6 மாதம் முதல் 6 வயது வரையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக 93,200 போ் இருந்தனா். அவா்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு ரூ. 18.68 கோடியில் வழங்கப்பட்டதால் அவா்களில் பலா் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனா். 32 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டு நிலையிலிருந்து மிதமான ஊட்டச்சத்து நிலைக்கும், 45.31 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கும் முன்னேறியுள்ளனா்.

இரண்டாவது கட்டம்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. பிறப்பிலேயே கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்த 6 வயதுக்குள்பட்ட 1.02 லட்சம் குழந்தைகளின் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டது. இதனால், 74.08 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டு நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு முன்னேறியுள்ளனா்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, பிரசவிக்கும் தாய்மாா்களின் கா்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கா்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.90 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 2.73 லட்சம் பாலூட்டும் தாய்மாா்களுக்கும் தனி ஊட்டச்சத்து வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு சத்துப் பற்றாக்குறை தடுக்கப்படுவதாக சமூக நலத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன... மேலும் பார்க்க