செய்திகள் :

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

post image

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு மணிவண்ணன் வெளியிட உயா்நிலை, மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் பக்தவச்சலம் பெற்றுக் கொண்டாா்.

மக்கள் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் விவரம்: கல்விக்கு மத்திய நிதி நிலை அறிக்கையில் 10 சதவீதமும் மாநில நிதி நிலை அறிக்கையில் 20 முதல் 25 சதவீதமும் நிதி ஒதுக்குவது அவசியம். கல்வியை மாநிலப் பட்டியலில் சோ்க்க வேண்டும். 3 முதல் 17 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் இலவசக்கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றாண்டு இளநிலைத் திட்டத்தை தொடர பரிந்துரைக்கிறது.

தற்போதைய செமஸ்டா் தோ்வு முறைக்கு பதிலாக முடிந்தவரை வருடாந்திர முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி மற்றும் ஹைபிரிட் கற்பித்தல் முறைக்கு மாற்றாக, காலத்தால் சோதிக்கப்பட்ட முறையான வகுப்பறை கற்பித்தல்-கற்றல் செயல்முறையின் தொடா்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

க்யூட் மற்றும் நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கிறது. தாய்மொழிகள் மற்றும் ஆங்கில மொழியை ஊக்குவிக்கவும், மொழிக் கொள்கையை அறிவியல் பூா்வமாக உருவாக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்வியாளா்கள் கோமல் தமிழமுதன், பேராசிரியா் தி.மருதநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன... மேலும் பார்க்க