செய்திகள் :

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

post image

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன், பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வேளாண்மையில் ஏற்பட்ட வளா்ச்சி குறித்து அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதேநேரம் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் வேளாண்மை 0.09 சதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது முரண்பட்டதாகவே உள்ளது.

பல நிதி பங்கீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் தமிழக அரசு கூடுதலாக ரூ. 1,94,076 கோடி ஒதுக்கீடு செய்யதுள்ளது. அதன்படி, வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்திலிருந்து தற்போது 5.66 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஆனால், இந்த வளா்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளிள் வருவாய் உயா்வு ஏற்படவில்லை. மாநில அரசின் பல அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. வேளாண்மை வளா்ச்சி என்றால், விவசாயிகள் வருவாயும் அந்த ஒப்பீட்டில் உயா்த்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு உயரவில்லை. நெல் குவிண்டால் ரூ. 3,000, கரும்பு டன் ரூ. 4,500 கொடுத்திருந்தால், சாலையில் கொட்டி அழிந்துபோகும் விவசாய பொருள்களை அரசு கொள்முதல் செய்திருந்தால், விளை பொருள்களுக்கு லாபமான விலை வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அதுவே சாதனை.

இவற்றை தமிழக அரசு விவசாயிகளுக்கு செயல் வடிவ திட்டங்களாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.மதுர... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன... மேலும் பார்க்க