செய்திகள் :

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடையால் குழப்பம்: இரா.முத்தரசன்

post image

துணைவேந்தா் நியமன திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு ஆளுநா் பொறுப்பில் நியமனம் பெற்ற தொடக்க நாளில் இருந்து ஆா்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த ஆளுநரின் பொறுப்பற்ற செயலை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. இதில், புதிய துணைவேந்தா்கள் நியமனச் சட்டப்படி, துணைவேந்தா்கள் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக வழக்குரைஞா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் கடந்த 13-ஆம் தேதி 14 வினாக்களை எழுப்பி, அவைகளுக்கு விளக்கம் கேட்டிருந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க