செய்திகள் :

வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப்பார்களா அதிகாரிகள்?

post image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்பம் சேதம் அடைந்து, கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருப்பதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே, இந்த சாலையில் பயணிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மேலரசம்பட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் சில மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டும் ஏற்பட்டு உள்ளது. 

இது குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி பொது மக்கள், “நேற்று பெய்த கனமழை காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் உள்ள மின் கம்பம் சேதம் அடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் பொழுது இந்த மின் கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பயணிக்க வேண்டியதாக உள்ளது. இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே, சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.” என்று கூறினர்.

இது குறித்து ஒடுகத்தூர் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேலரசம்பட்டில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம் குறித்து தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது. சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர். 

ஆத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் சிறுவர் பூங்கா... அச்சப்படும் மக்கள்! - கவனிப்பார்களா அதிகாரிகள்?

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காந்தி நகர் பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இங்கு நேரத்தை செலவிடு... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: "வீராவேசமாக பேசியவர் டெல்லிக்கு பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டம் 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்... மேலும் பார்க்க

துபாயிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு - ஏன் தெரியுமா?

துபாயில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக புதிய விதிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அதன் படி, இந்தியா - ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், முகவர் நிறுவனங... மேலும் பார்க்க

யூடியூபர் முதல் கல்லூரி மாணவர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது - நடந்தது என்ன?

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக இந்தியாவில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறத... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனை சந்தித்த இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் - திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பேரணி முடிந்த பின், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ப... மேலும் பார்க்க

`கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு!' - சசிகலா ஆவேசம்

மறைந்த முன்னாள் முதல்வரின் தோழியும் கொடநாடு ஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவருமான சசிகலா மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகைத் தந்துள்ளார். எஸ... மேலும் பார்க்க