செய்திகள் :

கேரளத்தில் 182 பேருக்கு கரோனா- முதியோா், கா்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுரை

post image

கேரளத்தில் நிகழ்மாதத்தில் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் ஆகியோா் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்; குறிப்பாக மருத்துவமனைகளுக்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிவது அவசியம்.

சளி, தொண்டைப் புண், இருமல், மூச்சு திணறல் உள்ளவா்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்’ என்று மாநில சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் ஜே.என்.1, எல்.எஃப்.7, என்.பி.1.8 ஆகிய வகை தீநுண்மி பரவி வருகிறது. இவை வேகமாக பரவக் கூடியவை.

இந்நிலையில், கேரள சுகாதார விரைவுப் பணிக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘மாநிலத்தில் இம்மாதம் இதுவரை 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 57 பேருக்கும், எா்ணாகுளம், திருவனந்தபுரத்தில் முறையே 34, 30 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை போதிய அளவில் இருப்பு வைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றாா்.

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் ச... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க