செய்திகள் :

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

post image

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் அறிவிக்கப்பட்டனர்.

கனிமொழி தலைமையில் குழு

தமிழக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழியை ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்படவுள்ளது. அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து, ஸ்பெயின், கிரீஸ், சிலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஏற்கெனவே, ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள... மேலும் பார்க்க

சீனா, துருக்கியைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்த நாடு?

நெதர்லாந்து நாடுதான், பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நாடாக அமைந்துள்ளது.இந்தியா, நெதர்லாந்து நாட்டின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தி... மேலும் பார்க்க

10 முதல்வர்களை உருவாக்கிய நான், இப்போது உழைப்பது முதல்வர் பதவிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

10 முதல்வர்களை உருவாக்கிய நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திமுக, த... மேலும் பார்க்க

போரை நிறுத்தியதாக 8 முறை டிரம்ப் கருத்து; மோடி அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ்

இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி மறுக்காதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா - பாகி... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க