செய்திகள் :

போரை நிறுத்தியதாக 8 முறை டிரம்ப் கருத்து; மோடி அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ்

post image

இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி மறுக்காதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதல் முடிவுக்கு வருவதாக 4 நாள்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதனிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை முன்வைத்து மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கருத்து தெரிவித்தார். டிரம்பின் கருத்துக்கு எதிர்க்கட்சிகளிடையே விமர்சனம் எழுந்த நிலையில், மோதல் குறித்து மட்டுமே அமெரிக்கா ஆலோசித்ததாகவும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்தது.

அதேபோல், இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறி பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே தாக்குதலை நிறுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆனால், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.

வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்க அதிபருடனான சந்திப்பின்போது, புதன்கிழமை மாலை பேசிய டிரம்ப், “வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாகவும், பாகிஸ்தானில் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள், மோடியும் சிறந்த மனிதர்” எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை நிறுத்தியதாக கடந்த 11 நாள்களில் 8 முறை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது நண்பரான பிரதமர் மோடியும் வெளியுறவுத் துறை அமைச்சரும் அமைதியாக இருக்கின்றனர். பிரதமர் மோடியை பாராட்டும் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபையும் பாராட்டுகிறார்.

இதன்பொருள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மட்டத்தில் இருக்கிறது என்பதுதான். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?

ஆபரேஷன் சிந்தூரை நான்கு நாள்களில் தலையிட்டு முடித்ததாக டிரம்ப் கூறுவதைக் கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரதமர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை திசைதிருப்பக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வருகிறதா கரோனா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 2020 ஜனவரியில் இந்தியாவில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் தீவிரம் நாட்டையே உலுக்கியது எனலாம். இந்ந... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. கட்சியின் தேசிய பொது... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிப்போம்: ஜெய்சங்கர்

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடை... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 103 பாரத் அம்ரித் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 103 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள... மேலும் பார்க்க

சீனா, துருக்கியைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்த நாடு?

நெதர்லாந்து நாடுதான், பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நாடாக அமைந்துள்ளது.இந்தியா, நெதர்லாந்து நாட்டின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் தி... மேலும் பார்க்க