செய்திகள் :

ஆம் ஆத்மியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழக ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் சிங்!

post image

ஆம் ஆத்மி கட்சி புதிய நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கும் முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது.

கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இந்த நியமனங்கள் முறைப்படுத்தப்பட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே கட்சியின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமேசமயம் ஆத் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்திற்கு இணைப் பொறுப்பாளர்களாக விஷேஷ் ரவி, அனில் ஜா மற்றும் சுரேந்திர குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரசேதத்திற்கு புதிய மாநிலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திற்கு ஜிதேந்தர் சிங் தோமர், கர்நாடகத்திற்கு ராஜேஷ் குப்தா, இமாசலில் ரிதுராஜ் கோவிந்த், உத்தரகண்டில் மகேந்திர யாதவ், ராஜஸ்தானில் தீரஜ் டோகாஸ், மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் ஜர்வால், தெலங்கானாவில் பிரியங்கா கக்கர், கேரளத்தில் ஷெல்லி ஓபராய், தமிழகத்திற்கு பங்கஜ் சிங், லடாக்கிற்கு பிரபாகர் கௌர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஞானேந்திர பரத்வாஜ் உத்தரகாண்டிற்கும், அதே நேரத்தில் விஜய் புலாரா ஹிமாச்சல பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக பணியாற்றுவார்கள்.

இந்த நடவடிக்கை ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன அடித்தளத்தை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகங்களிடையே அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர். பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்

புது தில்லி: நாட்டில் வக்ஃப் அமைப்பு என்ற பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது கொடூர... மேலும் பார்க்க

'பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்' - சுப்ரமணியன் சுவாமி

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிகார் பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்... மேலும் பார்க்க

2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!

மும்பையிலுள்ள பிரபல் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பாந்திரா காவல் நிலையத்தில், பிரபல பா... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-ப... மேலும் பார்க்க

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!

போரை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் கொள்கைகள் இன்னும் முடியவில்லை, அதன் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவ... மேலும் பார்க்க