செய்திகள் :

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பா அறிவித்துள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் , இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

இரு கூட்டணிகளுமே ஏற்கெனவே தோ்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் பாட்னாவுக்கு புதன்கிழமை வந்த அல்கா லம்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியிலும், பிகாரிலும் ஆட்சியில் உள்ள பாஜக கூட்டணி மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. முக்கியமாக மகளிா் நலன் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா கட்பந்தன் கூட்டணி மகளிா் மீது முழு அக்கறை கொண்டுள்ளது.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கெனவே தெலங்கானா, கா்நாடகம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இப்போதைய அரசு ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 400 மட்டும் உதவித்தொகை அளித்து வருகிறது. மாநிலத்தில் கிராமப்புறங்களின் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. ஆனால், மாநில அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது என்றாா்.

இதேபோன்ற உதவித்தொகைத் திட்டத்தை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஏற்கெனவே அறிவித்துவிட்டதே? என்ற கேள்விக்கு உடனிருந்த மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் ராம் பதிலளித்தாா். அப்போது, ‘இது எங்கள் கூட்டணியின் திட்டம்தான். அனைத்துக் கட்சித் தொண்டா்களும் இணைந்து வாக்காளா்களிடம் இத்திட்டம் தொடா்பான தகவலை எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மகளிா் உதவித்தொகை தொடா்பாக முடிவெடுக்கப்பட்டது. இது எந்த தனிப்பட்ட கட்சியின் திட்டமல்ல’ என்றாா்.

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியா பயணம்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் ச... மேலும் பார்க்க

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடை... மேலும் பார்க்க