செய்திகள் :

நயினார் நாகேந்திரனை சந்தித்த இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் - திருப்பூரில் நடந்தது என்ன?

post image

திருப்பூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பேரணி முடிந்த பின், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மந்திரம் மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் சின்னசாமி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நயினார் நாகேந்திரனை இருவரும் சீருடையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. எனினும், காவல் துறை சீருடையுடன் சென்று பேசியதால் அவர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

இதேபோல திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் நல்லசாமி. இவர் குற்றவாளி ஒருவரின் மனைவியிடம் செல்போனில் அழைத்து தவறாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரை மாநகர காவல் ஆணையர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் 3 பேர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது திருப்பூர் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

`கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு!' - சசிகலா ஆவேசம்

மறைந்த முன்னாள் முதல்வரின் தோழியும் கொடநாடு ஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவருமான சசிகலா மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகைத் தந்துள்ளார். எஸ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் பயணிகள்... ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கியதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அருகிலுள்ள ஏலகிரி ஏரியில் மாசுபாடு ஏற்படுவதாகப் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை சீரமைப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், திரியாலம் கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்த பயணியர் நிழற்குடையால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் உள்ளிட்ட ஊர்களுக்கு... மேலும் பார்க்க

``டாஸ்மாக் ரெய்டு பயத்தில், அதிமுக-வினர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏவல்..'' - இபிஎஸ் காட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் குறித்து அவரின் சொந்தக் கிராமமான `சேவூர் மக்கள்’ என்ற பெயரில், கடந்த 2022-... மேலும் பார்க்க

Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன அறிவிப்பாரோ என்ற பீதியில் தான் உலக நாடுகள் இருக்கின்றன என்று கூட கூறலாம். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து வரிசையாக அறிவிப்புகளை அறிவித்து கொண்டே வருகிறார். அவற்... மேலும் பார்க்க