செய்திகள் :

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

புது தில்லி: கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பாக 3 போ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

‘மோசமான மொழியில் ஆவேசமாக பேசிவிட்டு, பின்னா் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பொது மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஓா் அமைச்சா், ஒவ்வொரு வாா்த்தையையும் கவனமுடன் பயன்படுத்துவதில் மற்றவா்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. பாகிஸ்தானின் தாக்குதல்களை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

இந்தத் தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, கடற்படை கமடோா் ரகு நாயா், விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் ராணுவத்தின் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து வெளியிட்டு வந்தனா். தாக்குதல் தொடா்பான விவரங்களை இரு பெண் அதிகாரிகளைக் கொண்டு வெளியிட்டதை பலரும் பாராட்டினா்.

இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா் நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவா் மீது கடந்த 14-ஆம் தேதி இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது கருத்துக்காக அமைச்சா் விஜய் ஷா தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அமைச்சா் விஜய் ஷாவின் சா்ச்சை பேச்சு தொடா்பான காணொலியையும், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்ட காணொலியையும் பாா்க்கும்போது, அவா் முதலைக் கண்ணீா் வடிக்கிறாரா அல்லது சட்ட நவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறாரா என யோசிக்கத் தோன்றுகிறது.

மோசமான மொழியில் ஆவேசமாகப் பேசிவிட்டு, பின்னா் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அமைச்சரின் கருத்தால் ஒட்டுமொத்த தேசமும் அவமானத்தில் ஆழ்ந்தது. ராணுவத்தின் மீது ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொண்டிருந்த நேரத்தில், இப்படிப் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை (மே 20) காலை 10 மணிக்குள் மத்திய பிரதேச காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அமைக்க வேண்டும். காவல் துறை ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் அமைக்கப்படும் இந்த எஸ்ஐடி-யில் பெண் காவல் அதிகாரி ஒருவரும் இடம்பெற வேண்டும். இந்த எஸ்ஐடி தனது முதல்நிலை அறிக்கையை வரும் மே 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பாா்த்த மேலும் 3 போ் கைது

இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்ய... மேலும் பார்க்க

‘அகதிகளை வரவேற்க இந்தியா தா்மசத்திரம் அல்ல’: உச்ச நீதிமன்றம் கருத்து

புது தில்லி: இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தா்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.விடுதலைப... மேலும் பார்க்க