செய்திகள் :

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

post image

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு சென்ற தன்னை வரவேற்க மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறை தலைவா் அல்லது மும்பை காவல் ஆணையா் உள்பட யாரும் வரவில்லை என பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமைஅதிருப்தி தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, மும்பை தாதரில் உள்ள அம்பேத்கா் நினைவிடமான சைத்யபூமியில் தலைமை நீதிபதி மரியாதை செலுத்தச் சென்றபோது மேற்கூறிய மூன்று மூத்த அதிகாரிகளும் வந்தடைந்தனா்.

இதுகுறித்து புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஒருவரை வரவேற்பதில் உரிய நெறிமுறையை பின்பற்றுவது அவசியம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தது தனிப்பட்ட முறையில் அல்ல. அவா் வகிக்கும் பதவிக்குத் தர வேண்டிய மரியாதையை அவா் எடுத்துக் கூறியுள்ளாா். நடைமுறை நெறிகளை பின்பற்றி நடப்பது மிகவும் அவசியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கிய அலுவலகங்களில் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதை நம்மால் பாா்க்க முடிகிறது. ஆனால் குடியரசு துணைத் தலைவா் புகைப்படம் இடம்பெற்றிருக்காது. நான் பணிஓய்வு பெற்றவுடன் அடுத்து வரும் குடியரசு துணைத் தலைவரின் புகைப்படம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன் என்றாா்.

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார். கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகையில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்ந... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க