செய்திகள் :

``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு

post image

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையொட்டி, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா.

இது குறித்து தற்போது இந்திய மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியுள்ளது. இது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மக்களிடம் பேசியதாவது,

"1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் நேரு கையெழுத்திடும் போது, நிபுணர்கள் கடுமையாக எச்சரித்தனர். இருந்தும், அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் மூலம் தண்ணீர் மட்டும் கொடுத்தத்தோடு அல்லாமல், பாகிஸ்தானுக்கு 83 கோடி ரூபாயை நேரு வழங்கினார். அந்த 83 கோடி ரூபாயின் தற்போதைய மதிப்பு ரூ.5,500 கோடி.

நேரு
நேரு

இந்தப் பணத்தை வைத்து பாகிஸ்தான் சிந்து நதிகளில் உள்ள மேற்கு ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டுப்போகும் கால்வாய்களைக் கட்டினார்கள்.

இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வண்ணம் தான் நாம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். ஆனால், பாகிஸ்தானோ தீவிரவாதிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.

சிந்து நீர் ஒப்பந்தத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளை தெரிவித்தார்.

நேரு பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்து அமைதியை வாங்கினார். ஆனாலும், அது எந்த விதமான அமைதி? நாம் தண்ணீரையும் இழந்தோம், பணத்தையும் இழந்தோம்.

இனி சிந்து நதி நீரை இந்தியாவிற்காகவும், இந்திய விவசாயிகளுக்காகவும் பயன்படுத்துவோம்" என்று பேசியுள்ளார்.

இந்தப் பேச்சு இந்திய அளவில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangovan Explains

அதிமுக, பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உள் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின். 'மி... மேலும் பார்க்க

``பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புதினுக்கு தான் லாபம்!'' - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்ய அதிபர் புதின் உடனான இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, அந்த தகவலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்களுக்கு அது குறித்து தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் தனது சமூக... மேலும் பார்க்க

``ரஷ்யா, உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரணும்'' - வணிகத்தை முன்னிறுத்தி ட்ரம்ப் வைத்த செக்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.கடந்த வார ரஷ்யா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு சமாதானத்துக்கு வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan:ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள். ஒருவேளை... மேலும் பார்க்க

`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் வேளாண்மை, பால் வளம், மீன் வளம் ஆகிய துறைகளில் தமிழகம் டாப் இடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்... மேலும் பார்க்க

Trump-ன் புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு `ரூ.13 ஆயிரம் கோடி' இழப்பு ஏற்படும் - ஏன்?

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதைக் செலவு மிக்கதாக மாற்றும் ட்ரம்ப்பின் 'ஒரு பெரிய அழகான மசோதா' (One Big Beautiful Bill Act) மீதான வாக்கெடுப்பு நடந்துள்ளது. இந்த மசோதா, ... மேலும் பார்க்க