செய்திகள் :

``ரஷ்யா, உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரணும்'' - வணிகத்தை முன்னிறுத்தி ட்ரம்ப் வைத்த செக்

post image

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

கடந்த வார ரஷ்யா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு சமாதானத்துக்கு வந்தது.

இந்நிலையில், நேற்று ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இடையே தொலைப்பேசியில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணிநேர தொலைபேசி அழைப்பை இப்போது தான் முடித்தேன். இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக போனது என்று நம்புகிறேன். ரஷ்யா, உக்ரைன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் முக்கியமாக போரை முடிப்பதைக் குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்கும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதற்கான நிபந்தனைகளை அவர்களே பேசி முடிவு செய்வார்கள். காரணம், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் நடந்த மற்றவர்களுக்குத் தெரியாத விஷயங்கள் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். உரையாடல் சிறப்பாகவே அமைந்தது.

ரஷ்யாவிற்கு அமெரிக்கா உடன் பெரியளவில் வணிகம் செய்ய வேண்டும். இந்தப் போர் முடிந்தப்பிறகு, அதற்கு நான் ஒப்புக்கொள்வேன். இதன் மூலம், ரஷ்யா வேலைவாய்ப்புகள் மற்றும் செல்வத்தை பெருக்க பெருமளவில் வாய்ப்புகள் உண்டு.

அதேபோல, உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டமைக்க வணிகம் பெருமளவில் உதவும். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே உடனடியாக பேச்சுவார்த்தைத் தொடங்கும்.

ட்ரம்ப்

புதினுடனான உரையாடலுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டேன்.

போப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி வாடிகன் இந்த பேச்சுவார்த்தையை நடத்த ஆர்வமாக உள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையொட்டி, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா. இது குறித்து தற்போது இந்திய மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியுள்ளது. இது ... மேலும் பார்க்க

Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangovan Explains

அதிமுக, பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உள் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின். 'மி... மேலும் பார்க்க

``பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புதினுக்கு தான் லாபம்!'' - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்ய அதிபர் புதின் உடனான இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, அந்த தகவலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்களுக்கு அது குறித்து தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் தனது சமூக... மேலும் பார்க்க

Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan:ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள். ஒருவேளை... மேலும் பார்க்க

`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் வேளாண்மை, பால் வளம், மீன் வளம் ஆகிய துறைகளில் தமிழகம் டாப் இடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்... மேலும் பார்க்க

Trump-ன் புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு `ரூ.13 ஆயிரம் கோடி' இழப்பு ஏற்படும் - ஏன்?

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதைக் செலவு மிக்கதாக மாற்றும் ட்ரம்ப்பின் 'ஒரு பெரிய அழகான மசோதா' (One Big Beautiful Bill Act) மீதான வாக்கெடுப்பு நடந்துள்ளது. இந்த மசோதா, ... மேலும் பார்க்க