செய்திகள் :

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

post image

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா, ஹுசைன்வாலா மற்றும் சட்கி எல்லைகளில் கொடியிறக்க நிகழ்வு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் புகுந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது.

தற்போது இரு நாடுகளும் மோதலை நிறுத்தியுள்ள நிலையில், இன்றுமுதல் மீண்டும் எல்லையில் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாற்றங்கள்

1959 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் கொடியிறக்க நிகழ்வில் இரு நாட்டு எல்லைக் கதவுகளும் திறக்கப்பட்டு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரரும், பாகிஸ்தான் ராணுவ வீரரும் கைக்குலுக்குவார்கள்.

இந்த நிலையில், இன்றுமுதல் கொடியிறக்க நிகழ்வில் எல்லைக் கதவுகள் திறக்கப்படாது என்றும், பாகிஸ்தான் வீரருடன் இந்திய வீரர் கைக்குலுக்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் நாளைமுதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கசாப்பு கடையா வச்சுருக்கேன்? ’பெரிய பாய்’ என்ற பெயருக்கு ரஹ்மான் ரியாக்‌ஷன்!

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தி... மேலும் பார்க்க

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆ... மேலும் பார்க்க