செய்திகள் :

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

post image

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஏன் வரவில்லை? என்ன காரணம்? என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவமதிக்கப்பட்டாரா, தலைமை நீதிபதி?

மும்பை தாதரில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த ஞாயிறன்று, நாட்டின் 52-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் பி.ஆர். கவாய் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு முதன்முதலாக சென்றிருந்தார்.

மரபார்ந்த நடைமுறையின்படி (ப்ரொடோகால்) அப்போது அங்கு அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் உள்பட ஒருவரும் வரவில்லை; இவ்விஷயத்தைப் பின்னர் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டி நீதிபதி பி.ஆா். கவாய் அதிருப்தி தெரிவித்தார்.

அதிருப்தியில்...

இதுதொடர்பாக பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் பம்பாய் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி பி.ஆர். கவாய் பேசுகையில், “ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

உயரதிகாரிகளுக்கு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், மாநில காவல் துறை தலைவர், மும்பை காவல் ஆணையர் வர விரும்பவில்லை என்றால் அதுபற்றி அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

நீதிபதிகளாகிய நாங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்கிறோம். நாங்கள் நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மற்றும் சமீபத்தில் அமிர்தசரஸுக்குச் சென்றோம். காவல் துறைத் தலைவர், தலைமைச் செயலர், காவல் ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

நாங்கள் நான்கு வாரங்களுக்கு முன்பு ஜார்க்கண்டில் உள்ள தேவ்கருக்குச் சென்றோம். இது தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 - 400 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் பலரும் அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால், இங்கே யாரும் வரவில்லை” எனப் பேசியிருந்தார்.

பின்னர், சில மணி நேரங்களில் தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடமான சைத்ய பூமிக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சென்றபோது, மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலர் சுஜாதா சௌனிக், காவல் துறை தலைவர் ரஷ்மி சுக்லா, மும்பை காவல் ஆணையர் தேவன் பாரதி ஆகியோர் வந்திருந்தனர்.

தலைமை நீதிபதி வருகையின் மரபார்ந்த நடைமுறை என்ன?

இந்திய தலைமை நீதிபதி வருகையின்போது, ​​மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் வரவேற்க வேண்டும் என்பதே மரபார்ந்த நடைமுறை. மேலும், அவர்களுடன் காவல் ஆணையரும் இருப்பார். இது பொதுவான நடைமுறையாக உள்ளது.

தலித் நீதிபதி

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தற்போது பதவியேற்றிருக்கும் நீதிபதி பி.ஆர். கவாய், இந்தப் பொறுப்பேற்கும் 2-வது தலித் என்பதுடன், புத்த மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றவர்.

தலித் என்பதால்தான் தலைமை நீதிபதியை வரவேற்க வராமல் இவர்கள் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்? என்றும் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என்றும் இதில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நிலநடுக்கம்...!

வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.வங்கக் கடல் பகுதியில், கடலுக்கடியில் இன்று (மே 20) மாலை 3.15 மணியளவில், 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!

கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகா... மேலும் பார்க்க

ராஜஸ்தானின் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மக்கள் வெளியேற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா ஆகிய மாவட்டங்களின் ஆட்சிய... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற... மேலும் பார்க்க