செய்திகள் :

ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

post image

மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முறைப்படி நடந்தது. பப்பு என்ற புரோக்கர் மணமகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதையடுத்து பப்புவிற்கு சர்மா இரண்டு லட்சம் கொடுத்தார். திருமணம் முடிந்தவுடன் அனுராதா தனது கணவன் வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இதையடுத்து குறுகிய காலத்தில் வீட்டில் உள்ள அனைவரின் நட்பையும் அனுராதா பெற்றார்.

திடீரென அனுராதா வீட்டில் இருந்த அனைவருக்கும் மயக்க மருந்து கலந்த சாப்பாட்டை கொடுத்து விட்டு வீட்டில் இருந்த ரூ.1.25 லட்சம் ஜூவல்லரி, 30 ஆயிரம் ரொக்க பணம், 30 மதிப்பு மதிப்பு மொபைல் போன் போன்றவற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சர்மா கூறுகையில், ''நான் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்கிறேன். கடன் வாங்கித்தான் திருமணம் செய்தேன். மொபைல் கூட கடனுக்குத்தான் வாங்கி இருந்தேன். அதனையும் எடுத்துச்சென்றுவிட்டார். அவர் என்னை மோசடி செய்வார் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. நான் பொதுவாக வேலை முடிந்து இரவில்தான் வீடு திரும்புவேன். சாப்பிட்ட பிறகு உடனே தூங்கிவிடுவது வழக்கம். வழக்கமாக நான் அதிகமாக தூங்க மாட்டேன். ஆனால் சம்பவம் நடந்த அன்று நான் அதிகமாக தூங்கிவிட்டேன்'' என்று தெரிவித்தார்.

சர்மா இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸாரே மணமகன் போல் நடித்து அப்பெண்ணை அணுகியிருக்கின்றனர். புரோக்கர் மூலம் அப்பெண்ணை திருமணம் செய்ய கான்ஸ்டபிள் ஒருவர் மணமகனாக நடித்தார். அவர் மூலம் அப்பெண் போபாலில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்பெண்ணிடம் இருந்த திருமணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் போலியானது என்று தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்டு விசாரித்ததில் 7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அனுராதா ஏற்கெனவே திருமணமானவர் ஆவார். அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தார். அவர் போபால் வந்த போது திருமண மோசடி கும்பலிடம் சேர்ந்தார். அக்கும்பல் அனுராதாவின் புகைப்படத்தை மணப்பெண் என்று கூறி அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். இதில் சிக்குபவர்களை போலி திருமணம் செய்து மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்த... மேலும் பார்க்க

Ranya Rao: கிட்டிய ஜாமீன்; ஆனாலும் ரன்யா ராவால் வெளியே வர முடியாது! - விவரம் என்ன?

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. ... மேலும் பார்க்க

`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் - சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி

ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை... மேலும் பார்க்க

டெல்லி செல்வதாகத்தான் சொன்னார்; ஆனால் பாகிஸ்தான் சென்றது பற்றி... - யூடியூபர் ஜோதியின் தந்தை தகவல்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவர் பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காருடன் இளைஞர் எரித்துக் கொலை; போலீஸார் தீவிர விசாரணை

தூத்துக்குடி – நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு துப்பாக்கிச்சுடும் தளம் உள்ளது. இதன் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு செல்லும் பாதையில் நான்குவழிச்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொல... மேலும் பார்க்க

``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புகார் கொடுத்த தாய்

"என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விபத்து வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து என் மருமகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இறந்தவரின் தாயார் தென்மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ள சம்... மேலும் பார்க்க