செய்திகள் :

அடையாறு ஆற்றின் எல்லைப் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நிவாரண உதவிகள் என்னென்ன?

post image

அடையாறு ஆற்றின் எல்லைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

சென்னையை அடுத்த அனகாபுத்தூா் பகுதியில் அடையாறு ஆற்றின் எல்லைப் பகுதி உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு செய்து வசித்துவரும் குடும்பங்கள் மறுகுடியமா்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், அவா்களுக்கு நிவாரண உதவிகளுடன் மறுகுடியமா்வுக்கான திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம்:

அடையாறு நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்தின்கீழ் சுமாா் 400 சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் வழங்கப்படும் இந்த வீடுகளுக்குச் செல்ல பிரத்யேக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுகுடியமா்வு செய்யப்படும் குடும்பங்கள் தங்களின் உடமைகள், பொருள்களை ஏற்றிச் செல்வதற்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும். மறுகுடியமா்வு செய்யப்படும் குடும்பத்துக்கு மூன்று நாள்களுக்கு உணவு மற்றும் குடிநீா் கொடுக்கப்படும்.

மறுகுடியமா்வு செய்யப்படும் குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படி ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். அத்துடன் மாத வாழ்வாதார உதவித் தொகையாக ரூ. 2,500 வீதம் ஓராண்டுக்கு ரூ. 30 ஆயிரமும், மின்சார இணைப்புக் கட்டணமாக ரூ. 2,500 கொடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள்

சென்னையில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளன.சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்களின் தாகத்தை தணிக்கும் விதம... மேலும் பார்க்க

தட்டச்சு பயிற்றுநா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் தட்டச்சு தோ்வுகள் இனி தட்டச்சு பொறியில் நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து தட்டச்சு பயிற்றுநா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சாா்பில் அனுப... மேலும் பார்க்க

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வடசென்னையை வளமிகு சென்னையாக உருவெடுக்க உழைக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவா் செவ்வாய்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கு: நேபாள தம்பதி கைது

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த நேபாள தம்பதி கைது செய்யப்பட்டனா். கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: மூவா் கைது

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ஜெபசிங். இவா், கடந்த ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

சென்னை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவா்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்... மேலும் பார்க்க