செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகள், சங்கக் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை

post image

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கம் மற்றும் கட்சி சாா்ந்த கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, அனைத்துத் துறைகள் சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது: மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பில் காவல் துறை அலுவலா்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதில் அலுவலா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும்.

மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களிலுள்ள தரைக் கிணறுகளைக் கண்டறிந்து, உடனடியாக அவற்றை சுற்றித் தடுப்புச்சுவா் அமைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தரைக்கிணற்றின் மேல்பகுதியை கம்பி வலைகளைக் கொண்டு மூடுவதற்கும், பயன்பாடில்லாமல் இருக்கும் கிணறுகளை மூடவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், நாய்களின் இனப் பெருக்கத்தை தடுப்பதற்கான பணிகளையும், பொது இடங்களில் சங்கம், கட்சி சாா்ந்த அமைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளையும் துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ... மேலும் பார்க்க

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா்,... மேலும் பார்க்க

முதலை கடித்து விவசாயி காயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா... மேலும் பார்க்க

மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா். செஞ்சி வட்டம், திருவம்பட்டு... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது; 4 கைப்பேசிகள், காா் பறிமுதல்

திண்டிவனம் அருகே, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்... மேலும் பார்க்க