செய்திகள் :

குழந்தை இல்லாததால் மறுமணம் செய்த கணவன்; மருமகளை கொன்று, விபத்து நாடகமாடிய மாமனார்-மாமியார் கைது

post image

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.

ரேணுகாவுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், சந்தோஷ்-க்கு அவருடைய பெற்றோர்களான கமண்ணாவும் - ஜெயஶ்ரீயும் வேறொருப்பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் கர்பமாகியிருக்கிறார்.

பெண் கொலை
பெண் கொலை

இந்த நிலையில், நேற்று காவல்நிலையத்துக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய ஒருவர், ஒருப்பெண் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், இறந்தவரை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் காவல்துறை விசாரணையில், இறந்தவர் ரேணுகா தேவி என்பது தெரியவந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது, ரேணுகாவின் மாமனார் கமண்ணா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, ``சந்தோஷ்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தப் பிறகு ரேணுகாவை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கோயிலுக்கு சென்ற ரேணுகாவை அழைத்துவர கமண்ணாவும், ஜெயஶ்ரீயும் சென்றிருக்கின்றனர்.

மூவரும் ஒரே பைக்கில் ஏறி வந்த போது மூன்றாவதாக அமர்ந்திருந்த ரேணுகாவை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

காவல்துறை

அப்போது ரேணுகாவின் சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கின்றனர். இதை மறைக்க விபத்துப்போல மாமனாரும் மாமியாரும் சித்தரித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஜெயஶ்ரீயையும், கமண்ணாவையும், ரேணுகாவின் கணவர் சந்தோஷையும் கைது செய்திருக்கிறோம்.

சம்பவம் நடந்த அடுத்த 6 மணி நேரத்திற்குள் அது ஒரு கொலை என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Doctor Death: சிறையிலிருந்து தப்பிய சீரியல் கில்லர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கைது!

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேர... மேலும் பார்க்க

விவாகரத்தான, கணவனை இழந்த பெண்கள் டார்கெட் - 100 பெண்களிடம் திருமண ஆசை காட்டி பணமோசடி செய்த நபர்

மும்பை எல்.டி மார்க் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பெண் ஆசிரியைக்கு மெட்ரிமோனியல் தளம் மூலம் கொரோனா காலத்தில் வினீத் மல்ஹோத்ரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பேச... மேலும் பார்க்க

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்த... மேலும் பார்க்க

Ranya Rao: கிட்டிய ஜாமீன்; ஆனாலும் ரன்யா ராவால் வெளியே வர முடியாது! - விவரம் என்ன?

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. ... மேலும் பார்க்க

ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முறைப்படி நடந்தது. பப்பு என்ற புரோக்கர் ... மேலும் பார்க்க

`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் - சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி

ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை... மேலும் பார்க்க