செய்திகள் :

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

post image

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்தது. மற்றக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்யாணியை சேர்த்திருந்தனர். பெற்றோர் தினமும் காலையில் அங்கன்வாடிக்கு கொண்டு விட்டுவிட்டு மாலையில் அழைத்துவருவது வழக்கம். நேற்று மாலை அங்கன்வாடி மையத்துக்கு குழந்தையை அழைத்துவர தாய் சந்தியா சென்றார். பின்னர் தனியாக வீடு திரும்பிய அவர் குழந்தையை பேருந்து பயணத்தின்போது தவறவிட்டுவிட்டதாக தெரிவித்தார். இதுபற்றி செங்கமநாடு போலீஸில் சுபாஷ் புகார் அளித்தார். எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி ஹேமலதா தலைமையில் போலீஸார் விரைந்து விசாரணை நடத்தினர். முதலில் தாய் சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறியுள்ளார்.

சந்தியா குழந்தையை அழைத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி

சந்தேகம் அடைந்த போலீஸார் அங்கன்வாடி மையத்துக்கு சென்றுவரும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூழிக்குளம் பகுதியில் குழந்தையுடன் சந்தியா நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் அடிப்படையில் போலீஸார் சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூழிக்குளம் பகுதியில் உள்ள சாலக்குடி ஆற்றில் குழந்தையை வீசி கொலை செய்ததாக தாய் சந்தியா ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சுமார் 8 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குழந்தையின் உடலை மீட்டனர்.

ஆற்றில் வீசி கொலைச் செய்யப்பட்ட குழந்தை கல்யாணி

குடும்பத்தில் சில பிரச்னைகள் உள்ளதாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே டார்ச் லைட்டை குழந்தையின் தலையில் அடித்தும், ஐஸ்கிரீமில் விஷம் கலந்துகொடுத்தும் குழந்தையை கொலைச் செய்ய சந்தியா முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். சந்தியாமீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு குழந்தையை கொலை செய்ததாக சந்தியா கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ranya Rao: கிட்டிய ஜாமீன்; ஆனாலும் ரன்யா ராவால் வெளியே வர முடியாது! - விவரம் என்ன?

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 1974 (COFEPOSA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. ... மேலும் பார்க்க

ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்கிய பெண்!

மத்திய பிரதேச மாநிலம், சவாய் மாதோபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவருக்கு அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை பேசி முடித்து திருமணம் செய்தனர். திருமணம் இந்து முறைப்படி நடந்தது. பப்பு என்ற புரோக்கர் ... மேலும் பார்க்க

`காலையில் தொழிலாளி, இரவில் கொலையாளி’ ; தோட்டத்து வீடு கொலைகள் - சிக்கிய நால்வரின் பகீர் பின்னணி

ஈரோடு மற்றும் திருப்பூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக ஈரோடு தனிப்படை போலீஸார் மூன்று தென்னை தொழிலாளிகள், நகைக்கடை... மேலும் பார்க்க

டெல்லி செல்வதாகத்தான் சொன்னார்; ஆனால் பாகிஸ்தான் சென்றது பற்றி... - யூடியூபர் ஜோதியின் தந்தை தகவல்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவர் பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காருடன் இளைஞர் எரித்துக் கொலை; போலீஸார் தீவிர விசாரணை

தூத்துக்குடி – நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு துப்பாக்கிச்சுடும் தளம் உள்ளது. இதன் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்திற்கு செல்லும் பாதையில் நான்குவழிச்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொல... மேலும் பார்க்க

``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புகார் கொடுத்த தாய்

"என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விபத்து வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து என் மருமகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இறந்தவரின் தாயார் தென்மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ள சம்... மேலும் பார்க்க