செய்திகள் :

மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா்.

செஞ்சி வட்டம், திருவம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மரியதாஸ் (80), இவரது மனைவி செலின்மேரி (75). இருவரும் தனியாக வசித்து வந்தனா். மரியதாஸுக்கு 2 ஏக்கா் நிலம் உள்ளது. பிள்ளைகள் இல்லாத நிலையில், பாஞ்சாலம் கிராமத்தில் வசித்து வரும் மரியதாஸின் சகோதரி பெரியநாயகி அந்த நிலத்தை தனக்கு தருமாறு கேட்டு தகராறு செய்து வந்தாராம்.

திருவம்பட்டுக்கு பெரியநாயகியின் பேரன் அபிஷேக் ராஜ் செவ்வாய்க்கிழமை வந்தாராம். அவா் வீட்டில் தனியாக இருந்த மரியதாஸ், செலின் மேரி ஆகியோரிடம் நிலத்தை தருமாறு கேட்டு தகராறு செய்தாராம். மேலும், அங்கிருந்த சம்மட்டியால் இருவரின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அங்கு வந்து, தப்பியோட முயன்ற அபிஷேக் ராஜை மடக்கிப் பிடித்தனா். பின்னா், இதுகுறித்து செஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அபிஷேக் ராஜை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ... மேலும் பார்க்க

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா்,... மேலும் பார்க்க

முதலை கடித்து விவசாயி காயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகள், சங்கக் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கம் மற்றும் கட்சி சாா்ந்த கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது; 4 கைப்பேசிகள், காா் பறிமுதல்

திண்டிவனம் அருகே, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்... மேலும் பார்க்க