செய்திகள் :

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

post image

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார்.

எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவரான பானு முஷ்டாக் கன்னடத்தில் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தை, பத்திரிகையாளரான தீபா பாஸ்தி என்பவர், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 'ஹார்ட் லேம்ப்' என வெளியிட்டார்.

இப்புத்தகத்தில் தென்னிந்தியாவில் வாழும் முஸ்லீம் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடனும், நிதானத்துடனும் 1990 முதல் 2023 வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 ஆண்டுகள் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பான 'ஹார்ட் லேம்ப்' இந்த புக்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.

நடப்பாண்டு புக்கர் பரிசு பட்டியலில் இவரின் ஹார்ட் லேம்ப் என்ற புத்தகத்துடன் சேர்த்து மொத்தம் 6 புத்தகங்கள் போட்டியில் இருந்தன. தற்போது அவரின் 'ஹார்ட் லேம்ப்' புத்தகம் புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எழுத்தாளர் பானுவுக்கும், மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்திக்கும் பரிசுத்தொகையான 50,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.48 லட்சம்) சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், கீதாஞ்சலிஸ்ரீ மற்றும் மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல் ஆகியோரின் ஹிந்தி நாவலான 'டோம்ப் ஆஃப் சாண்ட்' இந்தியா சார்பில் முதலாவது புக்கர் பரிசை வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, ஆளுநர்கள் மூலமாக சில மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க