'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்...
வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்
புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைகளே உள்ளன. சாரிட்டி என்பது இந்து உள்பட அனைத்து மதங்களின் ஒரு அங்கம் எனறு வாதிட்ட மத்திய அரசு, வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, வக்ஃப் தொடர்பாக, நாடு முழுவதும் பல சொத்துகளில் பிரச்னைகள் இருந்ததாகவும் பல இடங்களில் வக்ஃப் சொத்துகள் தொடர்பாகபல பிரச்னைகள் இருந்த நிலையில்தான் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் காவலன் மத்திய அரசு. அவர்களின் நிலங்களை காப்பதும் அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில், முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 5 மனுக்களை தெரிவு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.