செய்திகள் :

'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்கிறார் கே.என்.நேரு

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் தேர்தல் பணிகளை விளக்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,

"தி.மு.க-வில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க கட்சி தோழர்கள் உற்சாகமாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக தி.மு.க தான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிப்போம். எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து தி.மு.க-வையும், தி.மு.க தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனை தாண்டி தான் பத்து தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி அடைந்துள்ளது.

kn nehru

அதேபோல், இந்த தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும். பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எந்த காலத்திலும் இதுபோல் தி.மு.க தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது, அவர்கள் உற்சாகமாக இருந்து, எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர்.  என்னிடம் 41 தொகுதி பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில், இரண்டு மூன்று தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் தி.மு.க-வுக்கு சாதகமாகத்தான் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தி.மு.க-வுக்கு வேண்டும் என்று அனைவரும் கேட்டுள்ளனர். அதனை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் தான். நான் முடிவு செய்ய முடியாது. 

எத்தனை முனை போட்டி என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.

`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!' - கேள்விகளை எழுப்பி சாடும் இபிஎஸ்

டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் குடியிருப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றம்; வலுக்கும் எதிர்ப்புகள்; அரசின் விளக்கம் என்ன?

அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.அரசின் இத்தகைய செயலுக்கு மே 17 இயக்கம் உள... மேலும் பார்க்க

Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, "இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்" என்று கூறும் வீடியோ இர... மேலும் பார்க்க

Pakistan: `ஃபீல்ட் மார்ஷல்' - ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வு! - பின்னணி என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி 'ஆபரேஷன் சிந்தூர்'. மே 7-ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த... மேலும் பார்க்க

`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு டெல்லி செல்வது, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது.இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க