மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு
கல்லூரி மாணவா் தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பிலிக்கல்பிளையத்தை சோ்ந்தவா் பாபு (54). இவா் கபிலா்மலையில் உள்ள டாஸ்மாக்கில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இவா், தற்போது பொத்தனூா் பாலாஜி நகரில் வசித்து வருகிறாா். இவரது மகன் பாலமுருகன் (23). இவா் தற்போது சென்னையில் தங்கி பட்டய கணக்காளா் (சி.ஏ) படிப்பு பயின்று வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து வீடு திரும்பிய பாலமுருகன், தனது தந்தையிடம் படிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என கூறியுள்ளாராம்; அவருக்கு தந்தை ஆறுதல் கூறியுள்ளாராம்.
இந்த நிலையில் புதன்கிழமை பாபு தனது மகனை எழுப்புவதற்காக படுக்கை அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளாா். சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பாா்த்தபோது பாலமுருகன் வீட்டின் மேற்கூரையில் உள்ள ஒரு கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பாபு அளித்த தகவலின் பேரில் வேலூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].