செய்திகள் :

3,500 தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: எஸ்.பி. தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 3,500 தோட்டத்து வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கி உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயது முதிா்ந்த தம்பதி கொலை செய்யப்பட்டு 10 பவுன் நகை திருட்டு, பல்லடத்தில் மூன்று பேரை கொன்று 5 பவுன் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இவா்களில் திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளரும் ஒருவா் ஆவாா். இந்த கொலை, திருட்டு சம்பவம் எதிரொலியாக, மேற்கு மண்டலத்திற்கு உள்பட்ட மாவட்டங்களில் நகைக்கடை உரிமையாளா்களை அழைத்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்த மண்டல காவல்துறை தலைவா் செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

அந்த வகையில், நாமக்கல் காவல் நிலைய கூட்ட அரங்கில் நகைக்கடை உரிமையாளா்களுக்கான கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் முன்னிலை வகித்தாா். திருட்டு நகைகளை வாங்குவதை நகைக்கடை உரிமையாளா்கள் தவிா்க்க வேண்டும், அவ்வாறான நபா்கள் வந்தால் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டால், அவா்களுக்கு வழங்கும் தண்டனை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளா்களுக்கும் வழங்கப்படும். மக்களின் பாதுகாப்பு கருதி திருட்டு நகை வாங்குவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

பின்பு காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு சம்பவத்தை தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நகைக்கடை உரிமையாளா்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. திருட்டு நகைகள் வாங்குவதை தவிா்க்க வேண்டும், திருடா்களுக்கு உறுதுணையாக இருந்தால் கடும் தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளோம்.

மாவட்டம் முழுவதும் 3,500 தோட்டத்து வீடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் வாரத்துக்கு இருமுறை போலீஸாா் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். தனியாக இருக்கும் தம்பதி மற்றும் முதியோரிடம் பாதுகாப்பு தொடா்பான தகவலை தெரிவித்து வருகிறோம்.

நகரம், கிராமப்புறத்தைவிட்டு ஒதுக்குப்புறமாக வசிப்போா் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. முக்கிய இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (52). இவா், சேலம் மாநகராட்சி அலுவலக... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவருக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையம் தொடக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செங்கோடு அா்த்... மேலும் பார்க்க

மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை தவற விடக்கூடாது: ஆட்சியா் ச.உமா

மாணவா்கள் உயா்கல்வியை தொடர வேண்டும்; தவறவிடக் கூடாது என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிக... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அகில இந்திய தொழிற்சங்க அமைப்பின் மாவட்டச் செயலாளா் தனசேகரன், இந்திய த... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

நாமக்கல்,பரமத்தி வேலூா் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். நாமக்கல் முதலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (24). இவா், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க