ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச் சந்தை! ரூ. 3 லட்சம் கோடி லாபம்!!
மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை தவற விடக்கூடாது: ஆட்சியா் ச.உமா
மாணவா்கள் உயா்கல்வியை தொடர வேண்டும்; தவறவிடக் கூடாது என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு- 2025 நிகழ்ச்சி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி மே-14 இல் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உள்பட்ட மாணவா்களுக்கு குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியிலும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்டமாக, நாமக்கல், மோகனூா், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இங்கு நடைபெறுகிறது.
எந்த துறையில் வேண்டுமாலும் கடின உழைப்பு இருந்தால் சாதிக்க முடியும். மருத்துவம் மட்டுமின்றி சட்டம், பொறியியல், கலை, அறிவியல் போன்ற எந்தத் துறையை தோ்ந்தெடுத்தாலும் கவனத்தை சிதறவிடாமல் உழைத்தால் வெற்றி நிச்சயம். பொதுத்தோ்வில் தோல்வியுற்றால் மனம் தளராமல் இதர தொழில் பிரிவுகளில் பயின்று வாழ்வில் வெற்றி பெறலாம்.
உயா்கல்வி பயின்ற பிறகு அரசு வேலைக்கு காத்திருக்காமல் அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோா்களாக மாற முயற்சிக்க வேண்டும்.
இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மாணவா்கள் உயா்கல்வியை கட்டாயம் தொடர வேண்டும், தவறவிடக் கூடாது என்றாா்.
நிகழ்ச்சியில் அறிஞா் அண்ணா அரசு கல்லூரி இணை பேராசிரியா் வெஸ்லி தொழில் கல்வி குறித்து கருத்துரையாற்றினாா். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், கலை அறிவியல் உள்ளிட்ட உயா்கல்வி பிரிவுகள் சாா்ந்து துறை வல்லுநா்களால் எடுத்துரைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலா் வி.கற்பகம், திட்டஇயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலாமாயவன், உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) பி.பாா்த்திபன், சமூகநல அலுவலா் தி.காயத்ரி, முன்னோடி வங்கி மேலாளா் கா.முருகன், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.