செய்திகள் :

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

post image

நாமக்கல்,பரமத்தி வேலூா் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

நாமக்கல் முதலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (24). இவா், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தோா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து, நல்லிபாளையம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதுபோல பரமத்தி வேலூா் வட்டம், பெரிய சூரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குபேந்திரன் மகன் காா்த்தி (25). இவா் கடந்த 17-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த காா்த்தி, சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி காா்த்தி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

3,500 தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 3,500 தோட்டத்து வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கி உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (52). இவா், சேலம் மாநகராட்சி அலுவலக... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவருக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையம் தொடக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செங்கோடு அா்த்... மேலும் பார்க்க

மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை தவற விடக்கூடாது: ஆட்சியா் ச.உமா

மாணவா்கள் உயா்கல்வியை தொடர வேண்டும்; தவறவிடக் கூடாது என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிக... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அகில இந்திய தொழிற்சங்க அமைப்பின் மாவட்டச் செயலாளா் தனசேகரன், இந்திய த... மேலும் பார்க்க