செய்திகள் :

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

post image

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பாகப் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி ரமணா தனது மனதில் இருக்கும் வேதனையைக் கொட்டித்தீர்த்தார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அவர் தனது உரையில், ''என்னை எனது சொந்த மாநிலமான ஆந்திராவிலிருந்து காரணமே இல்லாமல் இடமாற்றம் செய்தனர்.

அவர்களின் ஈகோவைத் திருப்திப் படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சிதான். இப்போது அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

ஆனால் கடவுள் அவர்களை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டார். வேறு வழியில் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

என்னைத் துன்புறுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என்னை இடமாற்றம் செய்தனர். காரணமே இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்றினார்கள்.

கொரோனாவிற்குப் பிறகு எனது மனைவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக எனக்குக் கர்நாடகாவிற்கு இடமாறுதல் கொடுக்கும்படி கேட்டேன்.

எங்கு இடமாறுதல் வேண்டும் என்று அவர்களும் என்னிடம் கேட்டார்கள். நான் கர்நாடகா வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை மத்தியப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

நீதிபதி ரமணா
நீதிபதி ரமணா

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவிடம் எனது மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி என்னைக் கர்நாடகாவிற்கு இடமாற்றம் செய்யும்படி கேட்டேன். அவர்கள் எனது கோரிக்கையைப் பரிசீலிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் கவாய் எனது கோரிக்கையைப் பரிசீலிக்கலாம். ஆனால் காலம் கடந்துவிட்டது.

நான் ஓய்வு பெறப்போகிறேன். இடமாறுதலால் மன அழுத்தம் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்தில் எனக்கு சக நீதிபதிகள் மற்றும் பார்கவுன்சில் முழு ஆதரவு கொடுத்தனர்'' என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட... மேலும் பார்க்க

Hindi: "இந்தியாவில் இந்தியில்தான் பேசுவேன்" - வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த வங்கி அதிகாரி

வங்கிகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியில் பேசும்போது வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா வங்கிகளில் இந்தியில் பேசிய வங்கி அதிகாரியை நவநிர்மாண் சேனா... மேலும் பார்க்க

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா?

வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் வருமானம் குறித்தும், எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.மறைந்த போப் பிரான்ஸ் தனது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்து நிதி சார்ந... மேலும் பார்க்க