செய்திகள் :

துணை வேந்தர்கள் நியமனம்: சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை!

post image

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்டங்கள் இயற்றப்பட்டதாக நெல்லையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது நியாயமானதாக இல்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வழக்கை விடுமுறைக்கால அமர்வில் அவசர வழக்காக மாலை 6 மணிக்கும் மேல் விசாரிப்பதன் அவசியம் என்ன” என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் உத்தரவு பிறப்பித்தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: விழுப்புரம் அருகே மலட்டாற்றில் குளித்த மூவர் பலி

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க

100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. ப... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

உயா்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடா்பாக தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா... மேலும் பார்க்க