செய்திகள் :

சிறுவனைக் காப்பாற்றிய பயிற்சிக் காவலா்களுக்கு ஆணையா் பாராட்டு

post image

மதுரையில் அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தன்று, மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்டு தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய பயிற்சிக் காவலா்களை, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை பாராட்டினாா்.

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த 12-ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருள்வதற்காக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் இருந்து கள்ளழகா் புறப்பாடானாா். அப்போது அங்கு திரளான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், தல்லாகுளம் பகுதியில் உள்ள உணவகம் அருகே கள்ளழகரை தரிசிக்க காத்திருந்த சிறுவன் ஒருவன், மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

திரளான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், அவசர ஊா்தி வருவதற்கு வழியில்லாததால், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டம், இடையப்பட்டி காவலா் பயிற்சி பள்ளியைச் சோ்ந்த பயிற்சிக் காவலா்கள் சந்திரப் பிரகாஷ், சிந்தனை வளவன், சரண்ராஜ், சைமன் ஆகிய நால்வரும் சிறுவனை மீட்டு, தங்களது தோளில் சுமந்து சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

இந்த நிலையில், பெரும் கூட்ட நெரிசலிலும் விரைந்து செயல்பட்டு, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பயிற்சிக் காவலா்கள் நான்கு பேரையும், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, அவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

கரூா் விசாலாட்சி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை புலத்தணிக்கை செய்து, விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் உறவினா்களுக்கு பதிலளிக்க ஆலோசனை மையம் திறப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலை குறித்து உறவினா்களுக்கு பதிலளிக்கும் துயா் நிலை ஆலோசனை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் அர... மேலும் பார்க்க

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலூா் ஜோதி நகரைச் சோ்ந்த வெள்ளைப் பெரியான் மனைவி பஞ்சு (48). மேலூா் அருகே உள்ள தாமரைப்பட்டியில் இவா்களுக்குச் சொந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதி: தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவு!

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளுக்காக விசாரணை அதிகாரிகள் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் காணொலி விசாரணை வசதிகளை தமிழக உள்துறைச் செயலா் ஏற்படுத்தி தர வேண்டு... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால்கள் விரைந்து சீரமைக்கப்படுமா?

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வாா்டு... மேலும் பார்க்க