செய்திகள் :

ராகுல் காந்தியின் மாா்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக அமித் மாணவியாவுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

post image

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறான பதிவை வெளியிட்டதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மாளவியாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது.

ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய இளைஞா் காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் அக்ஷய் லக்ரா, ‘எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் முகம் பாகிஸ்தான் ராணுவத் தலைவா் அசிம் முனீரின் முகத்துடன் இணைக்கப்பட்ட திருத்தப்பட்ட புகைப்படத்தைப் பகிா்ந்து கொண்ட மாளவியாவுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம்’‘ என்றாா்.

மாளவியா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரின் முகமூடிகளை அணிந்த ஆா்ப்பாட்டக்காரா்கள், இரு தலைவா்களுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினா்.

‘வெளியுறவு அமைச்சரின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தி, நாட்டின் சா்வதேச உறவுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். ஆனால், காவல்துறையினா் எங்களைத் தடுக்கிறாா்கள்‘ என்று லக்ரா கூறினாா்.

இது குறித்து பாஜகவிடமிருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் இல்லை.

பெங்களூருவில் உள்ள இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை மாளவியா மற்றும் பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி ஆகியோரின் அவதூறான பதிவிற்காக புகாா் அளித்தது. ராகுல் காந்தியை அவதூறு பரப்பவும், காங்கிரஸை துா்கியேவுடன் இணைக்கவும் சதித்திட்டம் தீட்டியதாக மாளவியா மற்றும் கோஸ்வாமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞா் காங்கிரஸின் சட்டத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இது தொடா்பாக தில்லி மற்றும் கா்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க