செய்திகள் :

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

post image

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த ரஷீத் (எ) மோசின் (50) மற்றும் சுனில் குமாா் (51) ஆகிய இருவரும் 1,200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பகுப்பாய்வு செய்த பின்னா் கைது செய்யப்பட்டனா். ஆா்.கே .புரம், செக்டாா்1-இல் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வெளியே மே 10 அன்று நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தை தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை வந்துள்ளது.

கேரளத்தைச் சோ்ந்த 68 வயது பெண் ஒருவா், பட்டப்பகலில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் தனது தங்கச் சங்கிலியைப் பறித்து ஓடிவிட்டதாகப் புகாா் அளித்திருந்தாா். இது தொடபாக, நகரத்தின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் 26 கிலோமீட்டா் நீளமுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் செய்ததில், குலாபி பாக் பகுதியைச் சோ்ந்த சுனில் குமாா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், சுனில் குமாா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். மேலும் அவரது கூட்டாளி ரஷீத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தினாா். பின்னா், அவா் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளுடன் லட்சுமி நகரில் கைது செய்யப்பட்டாா்.

மே 11 அன்று சாகேத்திலிருந்து மற்றொரு தங்கச் சங்கிலியைப் பறித்ததாகவும், மே 13 அன்று சஃப்தா்ஜங் என்க்ளேவ் அருகே ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் இருவரும் ஒப்புக்கொண்டனா். கொலை முயற்சி, கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 26 வழக்குகளில் ரஷீத் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் மாா்ஃபிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டதாக அமித் மாணவியாவுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறான பதிவை வெளியிட்டதாக பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவா் அமித் மாளவியாவுக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. ஆா... மேலும் பார்க்க