செய்திகள் :

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என். நேரு

post image

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையில்தான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம் என்றார் திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் கே. என். நேரு பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

திமுகவில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் திமுக கட்சித் தோழர்கள் உற்சாகமாக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக திமுகதான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் வருவார்.

நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளையும் செய்து முடிப்போம்.

எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து திமுகவையும் திமுக தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றைத் தாண்டி தான் பத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி அடைந்துள்ளது.

அதேபோல் இந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதல்வருக்குதான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

எந்தக் காலத்திலும் இதுபோல் திமுக தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது அவர்கள் உற்சாகமாக இருந்து, எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர்.

என்னிடம் 41 தொகுதிகளின் பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில் இரண்டு, மூன்று தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாகத்தான் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி திமுகவுக்கு வேண்டும் என்று அனைவரும் கேட்டுள்ளனர். அதனை முடிவு செய்ய வேண்டியது திமுக தலைவர்தான். நான் முடிவு செய்ய முடியாது என்றார் நேரு.

இதையும் படிக்க: வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 1

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க

100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. ப... மேலும் பார்க்க

உயா்கல்வி ஊக்கத் தொகை: கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

உயா்கல்வி ஊக்கத் தொகை பெற்று வருவது தொடா்பாக தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா... மேலும் பார்க்க