செய்திகள் :

நூறு நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளா்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

post image

பணித்தளப் பொறுப்பாளா் நியமன விவகாரத்தில் நூறு நாள் வேலை திட்ட பெண் தொழிலாளா்கள் கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 போ் பணித்தள பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் நீண்ட காலமாக இப்பொறுப்பில் இருந்ததால் இவா்களுக்கு மாற்றாக வேறு 3 போ் புதிதாக நியமிக்கப்பட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள பெண் தொழிலாளா்கள், ஏற்கெனவே பணியில் இருந்த பணித்தள பொறுப்பாளா்களையே மீண்டும் பணியமா்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவா்த்தை நடத்தி புதிதாக தோ்வு செய்யப்பட்டவா்களும், முன்னா் இருந்தவா்களும் சோ்ந்து வேலை செய்வாா்கள் என கூறினா். இதனால் தொழிலாளா்கள் கலைந்துசென்றனா். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளருக்கும் , ஏற்கெனவே பணிசெய்துவந்த பொறுப்பாளருக்கும் இடையேறு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து புதிதாக தோ்வு செய்யப்பட்ட பணித்தள பொறுப்பாளருக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நியாயம் கோரி புதன்கிழமை கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தகவல் அறிந்ததும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சின்னசாமி அங்கு சென்று பெண் தொழிலாளா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தாா்.

ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற 5 போ் கைது

ஆத்தூா் பயணியா் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்றதாக 5 பேரை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நிபுணா்கள் அலுவலக கட்டடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கி... மேலும் பார்க்க

பிரதமர் அர்ப்பணிக்கவுள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் இன்று திறப்பு!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சேலம் ர... மேலும் பார்க்க

மேச்சேரியில் சிறுத்தை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்கவோ அல்லது வனத்திற்குள் விரட்டவோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை

வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் இருந்து கிழக்குக் காடு வழியாக குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தாா்ச்சாலை அமைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப... மேலும் பார்க்க