செய்திகள் :

கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!

post image

இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது.

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலாண்டில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு சரிந்துள்ளது.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 30,640 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 44,295 ஆக இருந்தது. அதாவது இந்த ஆண்டு 31% வரை சரிந்துள்ளது.

ஒட்டுமொத்தமாகச் சரிவு

இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி 2024 காலாண்டில் 1,21,070. இதுவே இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 96,015 ஆக உள்ளது.

சர்வதேச நாடுகளில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களை அனுமதிப்பதில் தொடர் சரிவையே இவை பிரதிபலிக்கின்றன. 2023 இறுதிக் காலாண்டில் இருந்து பெருமளவு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை கனடா குறைத்து வருவதை இது காட்டுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் இருந்து வந்த மாணவர்களில் 6,81,155 பேருக்கு கனடா அரசு அனுமதி அளித்தது. இதில், 2,78,045 பேர் இந்திய மாணவர்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5,16,275 எனக் குறைந்தது. இதில், இந்திய மாணவர்கள் 1,88,465 பேர்.

காரணங்கள் என்ன?

குடியேற்றத் தரவுகளில் இருந்த குளறுபடிகள் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்தது. வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலை, உடல்நலனைப் பேண வேண்டிய அழுத்தம், போக்குவரத்து போன்றவையும் பகுதியளவு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இதனிடையே மீண்டும் ஆட்சியைப் பிடித்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, தற்போதுள்ள நிலையே தொடரும் என உறுதிப்படத் தெரிவித்தார்.

கனடாவில் படிக்க, தொழில் புரிய, வேலைக்காக என பல்வேறு காரணங்களால் தற்காலிக குடியேற்றம் கொண்டவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க |விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடை... மேலும் பார்க்க