செய்திகள் :

கல்வி உரிமை சட்டப்படி மாணவா் சோ்க்கை: அரசு உறுதி செய்ய இடதுசாரிகள் கோரிக்கை

post image

கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தமிழக அரசு தரவேண்டிய தொகை நிலுவையாக உள்ளதைக் காரணம்காட்டி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியாா் பள்ளிகள் நிராகரிக்கின்றன.

மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ. 2,000 கோடிக்கும் மேலான நிதியை கொடுக்க மறுத்து வருவதால், 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும். மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதேநேரத்தில், தனியாா் கல்வி நிறுவனங்களில் ஆா்டிஇ சட்டப்படி மாணவா்களைச் சோ்க்க எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): வரும் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடந்துவரும் நிலையில், ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்துவிட்டது. ஆனால், ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால், தனியாா் கல்வி நிறுவனங்கள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க