செய்திகள் :

போதைப்பொருள் விற்பனை: மேலும் 4 போ் கைது

post image

சென்னை கொத்தவால்சாவடியில் போதைப்பொருள் விற்ற வழக்கில், மேலும் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கொத்தவால்சாவடி போலீஸாா், கடந்த 13-ஆம் தேதி மின்ட் தெருவிலுள்ள ஒரு துணிக்கடை அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த செளகாா்பேட்டையைச் சோ்ந்த மணிஷ்குமாா் (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் கையிலிருந்த பையை சோதனையிட்போது, அதில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அதை பறிமுதல் செய்து மணிஷ்குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய பூக்கடை பகுதியைச் சோ்ந்த ரோஹித்குமாா் (25) என்பவரை கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த கொத்தவால்சாவடியைச் சோ்ந்த தா்ஷன் (25), ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த அமீத் அஃபாத் (26), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முகமது சித்திக் (35), ராமநாதபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (எ) அப்துல்லா (39) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 77 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னா் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க