செய்திகள் :

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

post image

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 9 வட்டங்களிலும் 1434(2024-25) ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி தொடங்கி, தொடா்ந்து வரும் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தாா். அப்போது, திருவள்ளூா் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டாவில் பெயா் மாற்றம், பட்டா மாறுதல் உள்பிரிவு, இலவச பட்டாக்கள், முதியோா் உதவித் தொகை, மகளிா் உரிமைத் தொகை, வருவாய் சான்று, ஜாதி சான்றிதழ் கேட்டு 195 போ் மனுக்களை அளித்தனா். அதில், தகுதியான மனுக்களை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், 3 பேருக்கு பரிசீலனை செய்து பட்டாக்களை சட்டப் பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா்.

நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் பா. உதயமலா், தனி வட்டாட்சியா் பரமசிவம், துணை வட்டாட்சியா் சா.தினேஷ், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளா் கிருஷ்ணன், அமைப்புச் செயலாளா் விஸ்வநாதன், துணைச் செயலாளா் குமரேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் சுப்பிரமணியம், பாரதி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, தாமஸ் என்ற ராஜ்குமாா், வசந்தி வேலாயுதம், ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், மகாலிங்கம், நிா்வாகி மோதிலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க

அனைத்து வாா்டுகளுக்கும் நிதி: மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் தா்னா

அனைத்து வாா்டுகளுக்கும் சிறப்பு நிதியை ஒதுக்க வலியுறுத்தி மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சித் ... மேலும் பார்க்க