செய்திகள் :

சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?

post image

சீனாவின் குயிசூ மாகாணத்தின் இருவேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் 19 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயிசூ மாகாணத்தின் சாங்க்‌ஷி மற்றும் குவோவா ஆகிய பகுதிகளில் இன்று (மே 22) அதிகாலை 3 மணி மற்றும் 8 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதில், சாங்க்‌ஷியில் 2 பேரும், குவோவாவின் கிங்யாங் கிராமத்தில் சுமார் 6 அடுக்குமாடி குடியிருப்புகளும் நிலச்சரிவினுள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், சுமார் 19 முதல் 21 பேர் நிலச்சரிவினுள் சிக்கி மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வெளியான தகவலினால் அப்பகுதி முழுவதும் அந்நாட்டு காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் லைஃப் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் நிலச்சரிவினுள் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.

குவோவா நகரம் முழுவதும் செங்குத்தான சரிவுகள் மற்றும் மலைப்பகுதிகளாக உள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணியளவில் குயிசூ மாகாண அரசு, புவியியல் பேரழிவுகளுக்கான இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

ஆனால், சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம், இன்று காலை 11 மணியளவிலேயே, புவியியல் பேரழிவுகளுக்கான அவசரகால பதிலை மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலையாக உயர்த்தியதுடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க:வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை!

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை யூத அருங்காட்சியத்... மேலும் பார்க்க

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று கால... மேலும் பார்க்க

வர்த்தகத்தை முன்வைத்தே இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் டிரம்ப் கருத்து!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் வர்த்தகத்தை முன்வைத்தே தீர்வு கண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே, வர்த்தகத்தை முன்வைத்து எந்த பேச்சுவார்த்தையும் அமெரிக்க... மேலும் பார்க்க

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க