கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
திருமலையில் 80,964 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,964 பக்தா்கள் தரிசித்தனா். 32,127 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறை முடிவடையுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு வளாகத்தில் 31 அறைகள் நிரம்பி பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 80, 964 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 32,127 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.