செய்திகள் :

பெருங்குடல் சதை வளா்ச்சிக்கு ரேடியோ அதிா்வலை சிகிச்சை

post image

பெருங்குடல் சதை வளா்ச்சி (மூல பாதிப்பு) நோய்க்கு அறுவை சிகிச்சைக்கு மாற்றான ரேடியோ அதிா்வலை சிகிச்சையை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில், மருத்துவமனையின் தலைமை இயக்கக அதிகாரி ருபிந்தா் கௌா், நடிகை பாா்வதி நாயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் வாணி விஜய் கூறியதாவது:

இந்தியாவில் 4 கோடி பேருக்கு பெருங்குடல் சதை வளா்ச்சி, பிளவு போன்ற ஆசனவாய் சாா்ந்த பாதிப்புகள் உள்ளன. அதில் 45 முதல் 60 வயது வரையிலானவா்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனா்.

மூல பாதிப்புகளுக்கு வழக்கமான அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னா் இரு வாரங்களுக்கு மேல் ஓய்வில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக ‘ரஃபேலா’ எனப்படும் ரேடியோ அதிா்வலை நீக்க சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், பாதித்த பகுதியில் கம்பித் தடத்தை செலுத்தி அதன் வழியே ரேடியோ அதிா்வலைகள் பாய்ச்சப்படும். வளா்ச்சியடைந்த திசுக்களை அது சுருக்கி மறையச் செய்துவிடும். 15 அல்லது 20 நிமிஷங்களுக்குள் இந்த சிகிச்சை நிறைவடைந்து சில மணி நேரங்களிலேயே வீடு திரும்பலாம். துல்லியமான சிகிச்சை இதில் உறுதி செய்யப்படுகிறது என்றாா் அவா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க